,அலையோசை சென்.அன்ரனிஸ் இறுதியில் மோதல்

முல்லைத்தீவு மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால் அங்கத்துவக் கழகங்களுக்கு இடையே நடத்தும் அணிக்கு 11 பேர் பங்கு பற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்ட போட்டித் தொடரின் இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு செம்மலை ம.வி.வி மைதானத்தில் இடம் பெறவுள்ளது –
இறுதியாட்டத்தில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டு கழக அணியைஎதிர்த்துஇரணைப்பாலைசென்.அன்ரனிஸ் விளையாட்டு கழக அணி மோதவுள்ளது

இதில் முதலாவது அரையிறுதியாட் ஆட்டத்தில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டு கழக அணியை எதிர்த்து கள்ளப் பாடு உதயம் விளையாட்டு கழக அணிமோதியது.இதில் உடுப்புக்குளம் அலையோசை விளையாட்டு கழக அணி 2: 1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி யாட்டத்தில் இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டு கழக அணியை எதிர்த்து சந்திரன் விளையாட்டு கழக அணி மோதியது.

இதில் ஆட்ட நேர முடிவில் இரண்டு அணியிரைும். தலா ஒரு கோலினை பதிவு செய்ய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. வெற்றி தோல்வி காண்பதற்காக சம நிலை தகர்ப்பு உதை வழங்கப்பட்டது. .இதில் இரணைப்பாலை சென்அன்ரனிஸ் விளையாட்டு கழக அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது..

Leave A Reply

Your email address will not be published.