தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்த்தம் 50 தொழிலாளர்கள் பலி.

தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட அனர்த்தம் – 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் பலத்த மழை பெய்ததால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததால் 50 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். இவ்வாறு சிக்கியவர்களால் வெளியே வர முடியவில்லை.

இதனால் சுமார் 50 தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.