ராட்சத கிரேன் உடைந்து விழுந்ததில் 16 பேர் பலி.. அதிர்ச்சி சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ராட்சத கிரேன் உடைந்து விழுந்ததில் 16 பேர் பரிதமாகஉயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்துக்கு உட்பட்ட ஷாபூர் பகுதியில் சம்ருதி விரைவு நெடுஞ்சாலையில், மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.கட்டுமான பணியாளர்கள் பாலத்தை இணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் .

அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் ஒன்று, இரும்பு பாலத்தின் மீது விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 16 பேர் பரிதாபமாக உயரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் பலர் பாலத்தின் அடியில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.