வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு!

வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின்போது அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.