“13” விடயத்தில் மகாநாயக்கர்கள் தலையிட வேண்டும்! – ரத்ன தேரர் கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாகக் குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம். ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.