தந்தையால் மகன் வெட்டிப் படுகொலை!

தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையால் அவரது மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் குருநாகலில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

நிதிப் பிரச்சினை காரணமாகத் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியதையடுத்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குருநாகல் – மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.