வெள்ளத்தில் பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து..!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி பேருந்து ஒன்று கவிழ்ந்தது.

நைனிடால் மாவட்டத்தில் உள்ள தான்காரி என்ற இடத்தில் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், அதன் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் வேகமாக சென்ற பேருந்து, வெள்ளத்தில் சிக்கி பக்கவாட்டில் சரிந்தது.

விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்து உடனடியாக மீட்கப்பட்டது. பேருந்தில் இருந்த 35 பேரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் வாகன போக்குவரத்து தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.