கிளிநொச்சி மாவட்டத்தின் கடல் எல்லைகளை வரையறுக்க நடவடிக்கை.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டக் கடற்பரப்புகளில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்டங்களின் கடல் எல்லைகளை வரையறை செய்து, இரு மாவட்ட கடற்றொழிலாளர்களினதும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேசத்தின் கெளதாரிமுனை, மண்ணித்தலை, விநாசியோடை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, அண்மையில் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அப்பகுதி கடற்றொழிலாளர்களோடு கலந்துரையாடியதன் அடிப்படையிலும், அவர்களோடு இணைந்து கெளதாரிமுனை தொடக்கம் கல்முனை வரையான கடற்பரப்பை படகுப்பயணம் மூலம் பார்வையிட்டதன் அடிப்படையிலும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.