தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு நெஞ்சுவலி? மருத்துவமனையில் அனுமதி

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திற்கு அருகே காரில் சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு திடீரென நெஞ்சுவலி இருப்பது போல தெரிந்துள்ளது.

பின்பு அவர், அதிகாரிகளிடம் கூறவே காரை நிறுத்தி காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரண கோளாறு மற்றும் வாயுத்தொல்லை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். பின்பு, மருத்துவ சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள நாராயாணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு அமைச்சரை அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காரிமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அங்குள்ள திமுகவினர் ஏராளமானோர் மருத்துவமனையின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.