கல்வியங்காட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்ட ஒருவரது உடல்

கல்வியங்காடு ஜிபிஎஸ் விளையாட்டு மைதான வீதியில் உள்ள வீடொன்றில் வாழ்ந்து வந்த கணபதிப்பிள்ளை மகேந்திரன் (52) என்பவரது சடலம் அடிகாயங்களுடன் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்தே நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் , அவரது உடலில் அடி காயங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் திருமணச் சடங்கிற்கு சென்ற வேளை குடும்பஸ்தர் தனிமையாக வீட்டில் இருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேந்திரன் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.