தென்னிலங்கை விபத்தில் வயோதிபதித் தம்பதி மரணம்!

காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் சாவடைந்துள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

69 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், படுகாயமடைந்த 65 வயதுடைய மனைவி பெந்தோட்டை வைத்தியசாலையிலும் சாவடைந்துள்ளனர் என்று விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.