ரஜினியின் ‘ஜெயிலர்’ 2-ம் பாகம் எடுக்க முடிவு.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நெல்சன் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய “ஜெய்லர்” திரைப்படம் வெளியாகிய 3 நாட்களில் உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் வெளியாகிய KGF2, RRR போன்ற பிரமாண்ட திரைப்படங்கள் வெளிநாடுகளில் நிகழ்த்திய வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.