இந்தியாவோடு கைகோர்த்து பணியாற்ற தயார்: அனுரகுமார (JVP)

இலங்கைக்கு மிகவும் அருகைமையில் உள்ள நாடு இந்தியாவாகும். தெளிவான பார்வையுடன் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்ததுள்ளார்.

களனியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நாசமாக்கி, திட்டமிட்ட முறையில் நாட்டை பரிதாப நிலைக்கு இந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த நாடாக மாற்றியுள்ளனர். இவர்களுக்கு எதிரான நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்ப்பதுடன், எமது அணியை வெற்றிபெறவும் செய்வர்.

நாட்டிற்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம். இந்த அவலநிலையில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

சீரழிந்த அமைப்பை மாற்றாவிட்டால் யார் மாற்றுவார்கள்? இந்த நேரத்தில் நாம்தான் அதனை செய்ய வேண்டும். ஊழல்வாதிகள் ஒருபோதும் நாட்டை சீர்திருத்த மாட்டார்கள்.

புவியியல் ரீதியாகவும், இந்தியா அருகாமையில் இருப்பதாலும் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்துவதாலும் சிறந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியாவுடன் பணியாற்ற நாம் தயாராகவுள்ளோம்.

அடுத்த ஆண்டு அக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆகஸ்ட் மாத்தின் தொடக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். ஒரு சிக்கலான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் தெளிவான பார்வையுடன் ஆட்சியாளர்களை தெரிவுசெய்ய வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.