கண்டி பெரகராவில் இரண்டு யானைகள் குழப்பம் : உயிரச்சத்தில் சிலர் ஏரியில் குதிப்பு (வீடியோ)

கண்டியில் இரண்டாவது கும்புல் பெரஹரா வீதிப் பயணத்தின் போது இரண்டு யானைகள் குழப்பமடைந்தமையால் , பெரஹராவை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து ஓடியதால் இன்று (22) இரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கண்டி ஏரி வட்டத்தில் அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழுவினர் ஏரியில் குதித்தபோது, ​​காவல்துறையின் உயிர்காப்புக் குழுவினர் மற்றும் கடற்படையினரால் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இரண்டு யானைகளும் தலதா வீதி வழியாக ஓடியபோது யானை ஒன்று குயின் ஹோட்டலின் தாழ்வாரத்தில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியபோது, ​​யானைப் பாகன்கள் சிலர் சிரமத்தோடு அதை கட்டிப்போட்டனர்.

இடையூறு செய்த இரண்டு யானைகளையும் அகற்றிய பின்னர், ஏற்பாட்டுக் குழுவினர் ஊர்வலத்தை தொடர்ந்து வீதி உலா வரச் செய்தனர்.

இச் சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.