கொழும்பில் இன்று ஒருவர் சுட்டுக்கொலை!

கொழும்பில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓட்டோவில் பயணித்த 47 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் அவரைச் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.