இனவாத நாடகத்தால் ஆட்சியைப் பிடிக்க முயல்வோருக்குப் பாடம் புகட்டுவர் மக்கள்! – சஜித் விளாசல்.

“ஆட்சியைப் பிடிப்பதற்காக 2019 இல் அரங்கேற்றிய இனவாத நாடகத்தின் இரண்டாவது பாகத்தைத் தற்போது அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“13 என்கின்றனர், 13 பிளஸ் என்கின்றனர். இவை யாவும் போலியான வாக்குறுதிகளாகவே உள்ளன. ஜனாதிபதி கனவில் உள்ள சிலர், தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், சுகபோக வாழ்வுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படுகின்றனர்.

2019 இல் மக்களை எவ்வாறு ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தார்களோ அதன் இரண்டாவது பாகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இனவாத ரீதியிலான பிரசாரங்கள் இதன் ஓர் அங்கமாகும்.

இனவாதம், மதவாதம் பரப்பி ஆட்சியைப் பிடித்தவர்களை மக்கள் விரட்டியடித்தனர் என்பதை நினைவில் வைத்துச் செயற்பட்டால் சிறந்தது.” – என்றார் .

Leave A Reply

Your email address will not be published.