2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் மரணம்; 9 பேர் பேர் காயம்.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் சாவடைந்துள்ளார். அத்துடன் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதியான 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். அதேவேளை, இரு பஸ்களில் பயணித்த 9 பேர் காயமடைந்து வத்துபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.