காவிரி நீர் வழக்கு: செப்.6ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

காவிரி நீர் விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை செப்டம்பர் 6 ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீா்ப் பங்கீட்டில் கா்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீா்ப் பங்கை கா்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் கடந்த 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அது போதாது, 24,000 கன அடி நீா் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.

இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி ஆணையம் உத்தரவிட்ட அளவின்படி நீா் திறந்துவிடப்பட்டதா, இல்லையா என்பது குறித்து ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பா் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

அடுத்ததாக வழக்கை செப்டம்பர் 11 ஆம் தேதி விசாரித்தால் போதுமானது என்று கர்நாடக அரசு கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியிருந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி(புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.