உதயநிதி தலைக்கு மேலும் தொகையை அதிகரிப்பேன்.. அயோத்தி சாமியார்!

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என அயோத்தி சாமியார் தெரிவித்துள்ளார்.

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் மிரட்டலுக்கு மிகவும் கூலாக பதில் அளித்திருந்தார். அப்போது “எனது தலையை சீவ ரூ. 10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு போதுமே என்றும் தெரிவித்தார். இந்த பேச்சு பட்டி தொட்டி எல்லாம் பரவ, மீண்டும் அயோத்தி சாமியார் கொலைமிரட்டல் பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என்றும் சனாதன தர்மத்தால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.