அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்களை உடன் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்! – பெருந்தோட்ட அமைச்சரிடம் மனோ வலியுறுத்து.

இரத்தினபுரி, வெள்ளந்துர தோட்டத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“பொலிஸ்காரர்களைப் போலவும், நீதிமன்றக் கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்களைக் கட்டுக்குள் கொண்டு வாருங்கள் என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் சொன்னேன்.

ஒவ்வொருமுறையும் பதில் கூறுகிறீர்கள், அல்லது ஒரு அரச அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்துகொள்கிறீர்கள். இதற்குத் தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சரிடம் கேட்டேன்.

இந்தக் கம்பனிக்காரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வைத் தேடுவோம் என ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.