லாட்டரி டிக்கெட்டுக்காக நண்பன் வெட்டிக் கொலை… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுக்காக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேவரக்கரை என்னும் பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 25 கோடி முதல் பரிசு அறிவிக்கப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி தனது நண்பர் அஜித் இடம் பத்திரமாக வைத்திருக்குமாறு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்ற போது மதுபோதையில் இருந்த நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அஜித், தனது கையில் இருந்த வெட்டு கத்தியால் தேவதாசின் கையை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தேவதாஸ், அதிகம் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அஜித்தை கைது செய்து அவரிடமிருந்த வெட்டு கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வெட்டி கொலை செய்யப்பட்ட தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.