கணவனை கத்தியால் குத்தி படுகொலை செய்த மனைவி.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜிதபுர பகுதியில் தனது கணவரை மனைவி கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் வைத்து கணவன் – மனைவிக்கு இடையில் நேற்று இரவு 11 மணியளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் மனைவியால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பாத்திமா ரிஸ்வானா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.