ஓட்டோ – பஸ் விபத்தில் இருவர் பரிதாபச் சாவு! – மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்…

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் ஓட்டோ ஒன்று பஸ்ஸுடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த ஓட்டோ ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்கள் ஆராச்சிக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

ஓட்டோ சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் எதிர்த் திசையில் பயணித்த பஸ்ஸுடன் ஓட்டோ நேருக்கு நேர் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.