மதுபான விருந்தில் மோதல்; ஒருவர் அடித்துப் படுகொலை.

அனுராதபுரம், சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் கலந்துகொண்ட மதுபான விருந்தின்போது நபர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு விருந்தின்போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்துகொண்ட இருவரே இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.

இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.