தென்மராட்சியில் ரயிலுடன் மோதுண்டு பெண்ணொருவர் சாவு!

யாழ்., தென்மராட்சி, சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை வடக்குப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்சிச் சென்ற ரயிலுடன் மோதுண்டே அந்தப் பெண் சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் மீசாலைக்கும் – புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட ரயில் பாதையில் இடம்பெற்றுள்ளது.

மீசாலை வடக்கைச் சேர்ந்த 67 வயதான கி.நாகேஸ்வரி என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அந்தப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.