யாழில் காந்தி ஜெயந்தி – காந்தீயம் ஏடும் வெளியீடு.

மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் சமய சமூகப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதிகள் அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.