அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சிறையில்உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர், அந்த பரிசோதனையில் அவரது ECG-யில் மாற்றங்கள் இருந்ததை தொடர்ந்து, இன்று காலை அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வந்தனர், அங்கு அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே அவருக்கு நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.