நாடல் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர் – மொட்டு எம்.பி. கூறுகின்றார்.

“நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர். தேர்தலைப் பிற்போட அரசு முயற்சிக்கவில்லை” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தேர்தலைப் பிற்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை. காரணத்தின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.

அடுத்த தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.

நாட்டில் புல் சாப்பிடும் மக்கள் இல்லை; சோறு சாப்பிடும் மக்கள்தான் உள்ளனர். எதிரணிகளின் அரசியல் நாடகம் மக்களுக்குத் தெளிவாக புரியும்.

கிராம மட்டத்தில் தற்போது கூட்டங்களை நடத்தி வருகின்றோம். எமது பலம் என்னவென்பதை ஜே.வி.பியினர் அங்கு வந்து பார்க்கலாம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.