காணித் தகராறில் 15 வயது சிறுவன் வெட்டிக்கொலை! – தென்னிலங்கையில் பயங்கரம்.

இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிறுவன் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை உள்ளிட்ட மூவர் படுகாயடைந்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம், மீரிகமை பிரதேசத்தில் நேற்று (14) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணிப் பிரச்சினையால் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி இறுதியில் கொலையில் நிறைவைடைந்துள்ளது.

15 வயதுடைய ஆர்.எம். சம்பத் என்ற சிறுவனே இதன்போது கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை உள்ளிட்ட மூவர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.