யாழ் பல்கலையின் பெயரை பயண்படுத்தி வேறு யாரும் பகிடிவதை செய்திருக்கலாம் – துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உடல்ரீதியான எந்தவொரு பகிடிவதையும் இடம்பெறவில்லை. இணையம் ஊடான பகிடிவதைகளை எமது பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயண்படுத்தி யாரும் செய்திருக்கலாம் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சற்குனராஜா தெரிவித்தார்.

இணைய வழியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் பகிடிவதை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இணைய வழி பாலியல் பகிடிவதை தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ் பல்கலைக்கழக வழாகத்தில் எதுவிதமான உடலியல் சார் பகிடிவதைகள் எவையும் இடம்பெறவில்லை.பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயண்படுத்தி வேறு யாரேனும் இக் குற்றங்களைப் புரிந்திருக்கலாம்.

சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் பகிடிவதைகள் தொடர்பில் இணையக் குற்ற பொலிஸாரிடம் விசாரணைகளை ஒப்படைத்துள்ளோம், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.