விசர் நரி கடித்து இருவர் பலி – மக்கள் தனியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை

களுத்துறையில் பயங்கரம்;
விசர் நரி கடித்து இருவர் பலி

– மக்கள் தனியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களுக்கு விசேட எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து விசத்தன்மை வாய்ந்த நரியொன்று திரிவது பற்றிய தகவல் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தனியே எந்தப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசர் நரி கடிக்குள்ளாகி இதுவரை இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன் கால்நடைகளும் உயிரிழந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விசர் நரி மனிதர்களைத் தனியே கண்டால் துரத்திக் கடித்து விடுகின்றது என்றும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட வேண்டாம் என்றும் அந்தப் பிரதேச மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.