கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் மீது தாக்குதல்

– மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தாக்குதலுக்குள்ளான நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபைக்குட்பட்ட காணி விவகாரம் தொடர்பில் நேரில் விசாரிப்பதற்காகச் சென்றபோதே அவர் தாக்குதலுக்குள்ளானார் என்று நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (17) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.