பொய் செய்தி வெளியிட்டதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலை மீது உதகை நகரமத்திய காவல் நிலையத்தில் புகார்.

பொய் செய்தி வெளியிட்டதாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா உதகை நகரமத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உதகையில் புதிய மார்க்கெட் அமைக்க 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், 36 கோடியில் புதிய மார்க்கெட் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியதை திமுக நகர மன்ற உறுப்பினர்கள் 36 கோடி லஞ்சம் பெற்றதாக அறிக்கை வெளியிட்டதற்கு உதகை நகர மன்ற உறுப்பினர் திரு. முஸ்தபா கடும் கண்டனத்தை தெரிவித்து ,பொய் செய்தி வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.