கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை வென்றார் வைஷாலி!

பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

மகளிா் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ஆவது சுற்றில் அவா், சீனாவின் முன்னாள் மகளிா் உலக சாம்பியனான ஜோங்யி டானை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் தனி முன்னிலையில் இருந்தார்.

2,498 ஈலோ லைவ் புள்ளிகளுடன் இருந்து வந்த வைஷாலி, மேலும் 2 புள்ளிகள் பெறும் பட்சத்தில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெறுவாா் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் வைஷாலி. இறுதிப் போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாமியன் பட்டத்தை வென்றார் வைஷாலி.

இதையடுத்து கிராண்ட் மாஸ்டா்களான, உலகின் முதல் உடன்பிறந்தோா் என்ற சாதனையை வைஷாலியும், அவரது சகோதரரான ஆா்.பிரக்ஞானந்தாவும் படைத்துள்ளார்கள். பிரக்ஞானந்தா ஏற்கெனவே கிராண்ட்மாஸ்டராக இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் மகளிருக்கான செஸ் கேன்டிடேட் தொடரில் விளையாட வைஷாலி தேர்வாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.