மாதம் ரூ.1000 திட்டம்.. மகளிருக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நவம்பர் 10ஆம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 1,06,52,000 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உதவி தொகை கிடைக்காத மகளிர் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

அதன்படி இதுவரை 11,85,000 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி முதல் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.