ஆளுங்கட்சியுடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பை நடத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது.

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று அறியமுடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.