நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்வதாகவும், நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழையும், தற்காலிக பலத்த காற்றும் வீசும்.

Leave A Reply

Your email address will not be published.