யாழ்ப்பாணம் வரவுள்ள நடிகை குஷ்புக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகின்றமைக்கு அவருக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் பகிரங்கமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம், முற்றவெளியில் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தில இருந்து பல கலைஞர்கள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இதில் நடிகை குஷ்புவும் ஒருவராக வருகை தரவுள்ளார்.

இவ்வாறு வருகை தரும் நடிகை குஷ்பு இந்திய ஊடகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கருத்தைத் தெரிவித்துவிட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் உறவுகளை மகிழ்வித்தல் என்னும் பெயரில் இங்கு வருகின்றார் எனவும், எனவே விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்புப் கோர வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

இருந்தபோதும் இந்தக் கண்டனக் குரல்கள் தொடர்பில் குஷ்பு எதனையும் தெரிவிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.