மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ரணில்!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

எதிஹாட் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 728 என்ற விமானத்தில் அவர் இன்று முற்பகல் 9.37 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.