யாழில் வயோதிபர் ஒருவர் அடித்துப் படுகொலை!

யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்குப் பகுதியில் வயோதிபர் ஒருவர் நேற்று (18) இரவு அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கின்ற 66 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகிய வயோதிபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் பணியாற்றும் உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் எனத் தெரியவரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேச இயலாத 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டார்.

தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.