சின்மயி விவகாரத்தில் வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்: ஹெச்.ராஜா

பாடகி சின்மயி குற்றச்சாட்டின் மீது கவிஞர் வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக மாவட்டம் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, “திராவிட இயக்கங்கள் பேசியே வளர்ந்தது. ஆனால், திராவிட இயக்கங்களில் இன்று பேசவே ஆள் இல்லை.

பெரியாரையும், அம்பேத்கரையும் நவீனயுகத்திற்கு மாற்ற வேண்டும். நல்ல சிந்தனைகளை கொண்டு செல்பவரின் எண்ணைக்கையும் குறைந்துள்ளது.

பெண்கள் இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே கிடைத்திருக்காது. ஆனால், பெண்களே இல்லையென்றால் ஆண்களுக்கு ஆறுதலே தேவை இருக்காது” என பேசினார்.

பெண்கள் தொடர்பாக வைரமுத்து பேசிய வீடியோ வைரலான நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “முதலில் சின்மயி குற்றசாட்டின் அடிப்படையில் மகளிர் ஆணையம் வைரமுத்துவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, வைரமுத்து திராவிட போராளி என்ற போர்வையில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என பாடகி சின்மயி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.