வட்டுக்கோட்டை இளைஞர் மரணம்: சாட்சியம் வழங்க சட்ட வைத்திய அதிகாரி, சிறை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் சாட்சியம் வழங்க யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோரை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நாளை (24) வெள்ளிக்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்ட அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பொலிஸாரால் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது உயிரிழந்தார் எனக் கூறப்படும் வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்கவே இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.