யாழ். கொடிகாமத்தில் மாவீரர் கொடிகளை அறுத்து எடுத்துச் சென்ற விஷமிகள்!

கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முன்னாள் உப தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு – நினைவுக் கொடிகளைக் கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பொலிஸார் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று முன்னாள் உப தவிசாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.