இஸ்ரேல்-காசா: பணயக்கைதிகள் விடுவிப்பும் , விபரமும் (வீடியோ)

தற்காலிக போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெண்களும் அடங்குவர்.

காசாவில் இருந்து எகிப்துக்கு செஞ்சிலுவைச் சங்கம் கொண்டு வந்த இந்தக் குழுவினர், தற்போது இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், மேற்குக் கரையில் உள்ள பெய்துனியா சோதனைச் சாவடி வழியாக 39 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

10 தாய்லாந்து நாட்டவர்களும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவரும் கத்தார் ஒப்பந்தத்திற்கு வெளியே மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர்.

கத்தார் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், தற்காலிக போர்நிறுத்தத்தின் போது 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் 150 பாலஸ்தீனிய கைதிகளும் நான்கு நாட்களில் விடுவிக்கப்பட உள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேலுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனைகளுக்காக எகிப்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிணைக் கைதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் இரண்டு, நான்கு, ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய நான்கு குழந்தைகளும், 85 வயதான பெண் ஒருவரும் அடங்குவர்.

Leave A Reply

Your email address will not be published.