சூர்யாவின் வழக்கு தள்ளுபடி : ஏமாற்றத்தில் அரசியல்வாதிகள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும் சூர்யா , தற்போது சூரரைப்போற்று படத்தின் வெளியீட்டுக்கு காத்துக்கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வால் ஏற்பட்ட சஞ்சலங்கள் காரணமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நீட் தேர்வை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகளை நேரடியாக தாக்கி அறிக்கைகளை வெளியிட்டு வந்தார்.

இது மத்திய மற்றும் மாநில கட்சியினர் இடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. மேலும் சூர்யா மீது பல வழக்குகளை தொடுக்க இந்த பிரச்சனை பூதாகரமாக மாறியது.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக சூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. ஆனால் அது தேவையற்றது என நீதிமன்றம் சூர்யாவுக்கு அறிவுரை வழங்கி அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

அதற்குபின் சூர்யா தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில், நீதிமன்றங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் எப்படியாவது சூர்யாவின் மீது வழக்கு வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சூர்யாவின் இந்த நடவடிக்கைகள் பல அரசியல் வாதிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. ஏற்கனவே விஜய் ஒரு பக்கம் வச்சு செய்த நிலையில் , தற்போது சூர்யாவும் தன் பங்குக்கு வச்சு செய்து கொண்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.