ரணில் தனித்து போகும் நிலை ! மாகாண சபை வேட்பாளர் பட்டியலுக்கு ஆட்களே இல்லை

ரணில் விக்ரமசிங்கவுக்கு விசுவாசமாக இருந்த முன்னாள் ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர்களில் ஏராளமானோர் இப்போது ஐக்கிய மக்கள் சக்தியில் சேர தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட அநேகர் வாய்ப்பு கோருவதாகக் கூறப்படுகிறது.

கட்சி வட்டாரங்களின் தகவல்களின்படி, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் யாரும் வரவிருக்கும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை.

இந்த நிலைமை காரணமாக, வரவிருக்கும் மாகாண சபை தேர்தல்களுக்கு வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் ஐ.தே.க பெரும் பிரச்சனைக்குள் சிக்கி தவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.