மத்தளை விமான நிலையம் ரஷ்ய – இந்திய தனியார் நிறுவனத்திடம்……

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். திரு.ருவன்சந்திர கூறுகிறார்.

அதன்படி எதிர்காலத்தில் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் கீழ், மத்தளை விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், அரசாங்கத்திற்கு வருமானத்தில் ஒரு பகுதி கிடைக்கும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் வருடாந்தம் ரூ. 2000 மில்லியன் செலவிடப்படுவதுடன், புதிய வேலைத்திட்டத்தின் மூலம் அந்த தொகையை சேமிக்க முடியும் என துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.