மூன்று நாள்களில் 14 பேர் மாயம்! – ஒருவர் சடலமாக மீட்பு.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து கடந்த மூன்று நாள்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஆகியோர் காணாமல்போன சிறார்களில் அடங்குகின்றனர்.

காணாமல்போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவிலைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியும், எடரமுல்லையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், அநுராதபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் அடங்குகின்றனர்.

அதேவேளை, மொரட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணும், பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கூலித்தொழிலாளியும், கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆணும், புத்தளத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணும் காணாமல்போனவர்களில் அடங்குகின்றனர்.

இதேவேளை, நோர்வூட் பிரதேசத்தில் காணாமல்போன வயோதிபப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பட மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 வயதான முத்து வீரம்மன் என்பவரே தோட்டத்தின் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.