யாழ். காரைநகர் கடலில் 6 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்புக்குள் ஊடுருவி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.