மொட்டு கட்சியின் இரண்டாவது தேசிய பொது மாநாடு இன்று கொழும்பில் ….

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு இன்று (15) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியானது. கட்சித் தலைமை, கட்சியின் பொதுச் செயலாளர், தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளும் நியமிக்கப்படவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பதவிகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டுடன், பசில் ராஜபக்ஷவின் முயற்சியின் கீழ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், கட்சி அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய மாநாட்டில் கட்சியின் அமைச்சர்கள், பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொள்ளவுள்ளதுடன், அதனுடன் இணைந்த அமைப்புக்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், கடந்த சில நாட்களாக கொழும்பிலும், நாடளாவிய ரீதியில் பல நகரங்களிலும் இந்த மாநாட்டுக்கு எவ்வாறு அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை காணக்கூடியதாக இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.